மத்தியப்பிரதேசம் பினா நதி ஆற்றின் நீரில் மூழ்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
மத்தியப்பிரதேசத்தில் உள்ள சாகர் மாவட்டத்தில் வசித்து வரும் பொதுமக்கள் சுற்றி பார்ப்பதற்காக பினா ஆற்று பகுதிக்கு சென்றுள்ளனர். ஆற்றின் கரையோரப்பகுதியில் உணவு தயார் செய்து வந்துள்ளனர். இந்த நிலையில், இன்று ஆற்றில் நீர் அதிகரித்து வெள்ளப்பெருக்காக மாறியது. இதனால், ஆற்றில் இருந்த 6 பேர் வெள்ளப்பெருக்கால் அடித்து செல்லப்பட்டனர். பின்னர், உடன் இருந்து தப்பி பிழைத்தவர்கள் மீட்பு குழுவினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
விரைந்த மீட்பு குழுவினர் அனைவரையும் இறந்த நிலையில் சடலமாக மீட்டனர். ஒரு குழந்தை மட்டும் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தடைசெய்யப்பட்ட பகுதிகளுக்கு சென்றது தான் அவர்களுக்கு இறப்புகளை காரணம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.